திருத்துறைப்பூண்டி, மே 9- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி மன்னார்குடி சாலை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் கபில் (29). பொறியியல் பட்டதாரியான இவர் திடீரென ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் கை-கால் செயலிழந்து இடுப்பு பகுதிக்கு கீழே முழுவதும் செயலற்ற நிலையில் உள்ளார். இவருக்கு முறையான மருத்துவ உதவி கள் மற்றும் வங்கிக்கடன் உதவி வழங்கிட வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மே 5 அன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதனையடுத்து அவருக்கு மாதாந் திர உதவித்தொகை ரூ.2000 வழங்கிட உறுதியளித்த அதிகாரிகள், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த நரம்பியல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் வீடு திரும்பியுள்ள கபிலை அவரது இல்லத்தில் சந்தித்த சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வைத்தியநா தன், நகர செயலாளர் கே.கோபு, நகரக்குழு உறுப்பினர் எம்.பி.கே.பாண்டியன் மற்றும் மூத்த உறுப்பினர் டி.வி.பன்னீர்செல்வம் ஆகி யோர் அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவருக்கு வங்கிக் கடனுதவி பெற்றுத் தரவும், சிறப்பு நேர்வாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்றுத் தர அரசை வலியுறுத்தவும், வீடு தேடி மருத்துவ உதவிகள் வந்து கிடைக்க வும் உறுதுணையாக இருப்பதாக உறுதி யளித்தனர்.