districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கல்

திருவாரூர், மார்ச் 6-  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் திங்களன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக் கள் பட்டா மாறுதல், புதிய  குடும்ப அட்டை, ஆக்கிர மிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா  உள்ளிட்ட பல்வேறு கோரிக்  கைகள் குறித்த 220  மனுக்களை மாவட்ட ஆட்சி யரிடம் அளித்தனர். மனுக் களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந் தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி, நடவடிக்கை மேற்  கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் சார்பில், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி களும், விபத்தில் உயிரிழந்த வரின் குடும்பத்திற்கு மாற்  றுத்திறனாளிகள் நலவாரி யத்தின் மூலம் ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும் வழங்கினார்.