districts

img

தாட்கோ திட்டத்தில் மானியம் வழங்கல்

திருவாரூர், ஜன.6-  திருவாரூர் மாவட்ட ஆட்சி யரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு  வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பொருளா தார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட் டன. இதனை மாவட்ட ஆட்சியர்  ப.காயத்ரி கிருஷ்ணன், தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழக தலைவர் உ.மதிவாணன், திருவாரூர்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோர் வழங்கினர். பழங்குடியினர் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தற்காலிக / தொகுப்பூதிய அடிப் படையில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்கள் 10 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.