districts

img

நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.19 - வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, விதைச் சான்றுத் துறை, வேளாண் வணிக வியல் துறை ஆகிய தொழில்நுட்பத் துறை களில் ஒன்றிய, மாநில அரசுகளின் வேளாண்மை மற்றும் உழவர் நலன் சார்ந்து அறிவிக்கும் திட்டங்களை முழுமையாக பய னாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு நிர்வா கம் மற்றும் நிதி மேலாண்மை பணி அவசி யமாகும்.  தற்போது நிர்வாகப் பணி, நிதி மேலாண்மை பணி மற்றும் ஆவணங்களை பராமரிக்கும் பணிகளை செய்வதற்கு குறைந்தபட்ச அமைச்சுப் பணியிடங்கள்கூட இல்லை. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாவட் டங்களுக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அனு மதிக்க வேண்டும். தோட்டக்கலைத் துறைக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அமைக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு ஆட்சிப் பணியிடம் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டத் தலைவர் சி.மாதவராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ந.தம்பிதுரை கோரிக்கை விளக்க உரை யாற்றினார். வட்டச் செயலாளர் என்.கோபி நாத் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் கு.கார்த்திகேயன், தே.கர்ணாமூர்த்தி, பி.மகாலிங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளர் சங்க மாநில பொதுச் செய லாளர் உ.சண்முகம் பங்கேற்றனர்.