திருவாரூர், ஜூலை 20 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளை ஞர்களிடம் புத்தக வாசிப்பினை மேம்படுத்த வும், அவர்களுக்கு கலை, இலக்கியம், வர லாறு போன்ற தளங்களில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், தமிழகத்திலுள்ள எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தமிழகத்தின் அனைத்து பதிப்பாளர்களின் நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் புத்தக கண்காட்சி ஒன்றினை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்த வேண்டும். மாவட்டத் தலைநகரான திருவாரூரில் கண்காட்சியை நடத்தித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டு கோரிக்கை மனு ஒன்றை தமுஎகச மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் மு.சௌந்தராஜன் ஆகி யோர் மாவட்ட வருவாய் அலுவலர் ப. சிதம்பரத்திடம் அளித்துள்ளனர். மேலும், திருவாரூர் நகரில் திருவள்ளு வர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், அம்பேத்கர் ஆகியோருக்கு அரசு சார்பில் சிலை வைக்க வேண்டும். திருவாரூரில் இயங்கும் இசைக் கல்லூரியில் அனைத்து விதமான நாட்டார் இசைகளையும் உள்ளடக்கிய பயிற்சி அளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு சார்பில் வீட்டு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மாவட்ட அளவில் கலை இலக்கிய நிகழ்ச்சி களை நடத்துவதற்கு கலை அரங்கம் ஒன்றினை நகராட்சி சார்பில் உருவாக்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் அம்மனுவில் முன் வைக்கப்பட்டுள்ளன.