திருவள்ளூர், மே 20 - திருவள்ளூர் மாவட்ட தையல் கூட்டுறவு சங்கத்தை (சொசைட்டி) முறையாக நடத்த வேண்டும் என தையல் தொழி லாளர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் 5 வது மாவட்ட பேரவை பொருளாளர் பி.நடேசன் தலைமையில் வியாழனன்று (மே-19) திருநின்றவூரில் நடை பெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் சரிதா வரவேற்றார்.பகுதி குழு உறுப்பினர் சித்ரா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாவட்ட செயலாளர் ஏ.பச்சையம்மாள் வேலை அறிக்கையை முன்மொழிந்தார்.சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.சந்தானம் துவக்கி வைத்து பேசினார்.கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.தேவேந்திரன், பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி இராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தையல் தொழிலாளர் கலைஞர்கள் சம்மேளன மாநில தலைவர் பி.சுந்தரம் நிறையுரையாற்றினார்.
தீர்மானங்கள்
தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய தையல் தொழிலாளிகளுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்ட தையல் கூட்டுறவு சங்கத்தை (சொசைட்டி) முறையாக நடத்தி, அனைத்து தொழிலாளர்க ளுக்கும் சமமாக துணிகளை வழங்கி, பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக பி.நடேசன், மாவட்டச் செயலாளராக ஆர்.சித்ரா, பொருளாளராக எம்.சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.