பொன்னேரி, மார்ச் 18- திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பேருந்து பணிமனையில் இருந்து பழவேற்காட்டிற்கு டி 28 என்னும் பேருந்து இயக்கப்படுகிறது. வழக்கம் போல் வியாழனன்று (மார்ச் 17) இரவு 10.15 மணிக்கு இந்த பேருந்தை ஓட்டுநர் கோலப்பன் பழவேற்காட்டிற்கு ஓட்டிச் சென்றார். இரவு 11 மணியளவில் பழவேற்காடு சென்றடைந்தது. அங்கு இரவு தங்கியபின் வெள்ளியன்று அதிகாலை 4.30 மணி அளவில் பழவேற்காட்டில் இருந்து பேருந்து புறப்பட்டு பொன்னேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. பாரதி நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநர் கோலப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலை தடு மாறிய அவர் பேருந்தை சாமர்த்தியமாக சாலையோரம் நிறுத்தினார். நெஞ்சை பிடித்தபடி சாய்ந்தார். இதையறிந்த பயணிகள் உடனடியாக 108 அவசர வாகனத்தை வரவழைத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டுச்சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இறக்கும் தருவாயிலும் பயணி களை காப்பாற்றவேண்டும் என்ற கடமை தவறாமல் செயல்பட்டுள்ளார். அவரது மரணம் பொன்னேரி மற்றும் பழவேற்காடு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கோலப்பனுக்கு மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.