திருவள்ளூர், டிச 20- அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 7 வது மாநாடு செவ்வாயன்று (டிச.20) மீஞ்சூரில் தோழர் ஜி.மணி நினை வரங்கத்தில் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின் மீஞ்சூர் பகுதி தலைவர் எ.செந்தில்குமார் வரவேற்றார்.மாவட்ட துணைத் தலைவர் டி.சரளா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்ட செய லாளர் அ.து.கோதண்டனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எம்.கர்ணன் ஆகியோர் சமர்பித்தனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக சங்க கொடியை சங்கத்தின் மாவட்ட முன்னாள் தலைவர் பி.கதிர்வேல் ஏற்றிவைத்தார். விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நூறுநாள் வேலை 150 நாட்கள் வழங்குவதோடு தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் முழு கூலியான ரூ.281 வழங்க வேண்டும், மேல்முதலம்பேடு ஊராட்சியில் நிறுத்தப்பட்ட நூறுநாள் வேலையை மீண்டும் துவக்க வேண்டும், அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக இ.தவமணி, செயலாளராக அ.து.கோதண்டன், பொரு ளாளராக என்.கங்காதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.