districts

img

மின் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா

திருவள்ளூர், ஆக 20- அனல் மின் நிலைய வாயி லில் பணி நிரந்தரம் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு  நிறுவனங்களில் 10 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றி  வரும் ஒப்பந்த தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்வ தாக 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும்.

 60 ஆயிரம் காலிபணி யிடங்களை நிரப்பிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

வடசென்னை அனல்மின் நிலைய சங்கத்தின் திட்ட தலைவர் ஜி.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார்.மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாவட்ட நிர்வாகிகள் சலில் குமார், ரவி, சுந்தரம் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் வாழ்த்தி பேசினர்.

செங்கல்பட்டு

மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளைச் செயலாளர் வி.தேவ குமார் தலைமை யில் போராட்டம் நடை பெற்றது.

கோரிக்கைகளை விளக்கி  சிஐடியு மாவட்ட செயலாளர்  க.பகத்சிங் தாஸ், மின்  ஊழியர் மத்திய அமைப் பின் கிளை பொருளாளர் தீனதயாளன் துணைத் தலை வர் மனோ மங்கையர்கரசி, இணை செயலாளர் பெரு மாள், மின்துறை பொறி யாளர் அமைப்பின் திட்ட  செயலாளர் எம்.மயில்வா கனன், ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் திட்டச் செய லாளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பேசினர் போராட்டத்தை நிறைவு செய்து மாநிலத் துணைத் தலைவர் என்.பால்ராஜ் பேசினார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற தர்ணா போராட்டத் திற்கு திட்ட தலைவர் ஆர்.மதியழகன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மண்டல செயலாளர் என்.பால்ராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர்,  திட்டச் செயலாளர் ஜி.பட வேட்டான், திட்ட பொருளா ளர் பி.கேசவன், திட்டத் துணைத் தலைவர் ஆர்.பாபு  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.