districts

img

வாழை கன்று நட்டு நெடுஞ்சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஏப். 10 - வாழை கன்றுகளை நட்டு நெடுஞ்சாலை பணி யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளை அரசு ஏற்று நடத்த வலி யுறுத்தி ஞாயிறன்று (ஏப்.10) திருவள்ளூரில் வாழைக் கன்று நட்டு நெடுஞ்சாலை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்  சாலைத்துறை சாலைப்பணி யாளர்கள் சங்கத்தின் சார்பில், திருவள்ளூர் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப் பணிகள் வழங்க வேண்டும். பணிநீக்க காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வாழையடி வாழையாக குடும்பங்கள் தழைத்தோங்க செய்ய வலியுறுத்தி வாழைக்கன்று நட்டு இந்த போராட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் கோதண்டன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் அம்ச ராஜ், மாநில இணைச் செய லாளர் நடராஜ், மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.