செங்கம்,ஜன.19- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேலபூஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (50). இவருடைய மகள் சாதனா (15). இவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் திடீரென கானாமல்போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பாய்ச்சல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்த னர். பிறகு, காவல்துறையினர் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மாணவி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து செங்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இருந்து மாணவியின் உடலை மீட்டனர். காவல்துறையினர் நடத்திய விசார ணையில் கால்நடைகளை பிடித்து சென்ற போது கால் தவறி கிணற்றில்விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.