ஆரணி, டிச. 14- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கொங்கரம்பட்டு ஊராட்சிக்குபட்ட கனகதோப்பு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியிலுள்ள கனக தோப்பு சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்றம், துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் பலனில்லை. தற்போது பெய்த கனமழை காரணமாக, கொங்கரம் பட்டு கனகதோப்பு சாலை குண்டும் குழியுமாக மாறியது. இத னால் வேலை செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாண வர்கள் மிகவும் அவதிப்படு கின்றனர். எனவே, இச் சாலையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் புதன்கிழமை (டிச. 14) சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.