திருவண்ணாமலை, பிப்.26- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையம் அருகே போதை கலாச்சாரத்தால் சீரழியும் தமிழக மாணவர்களையும், இளைஞர்களையும் பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. வாலிபர் சங்க வட்டார செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ச.பாரி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமார், பிபிஎம் நிர்வாகிகள் ப.செல்வன், டி.வெங்கடேசன், சிஐடியு நிர்வாகிகள் வே. சங்கர், மாரிமுத்து, ரவிச்சந்திரன், நாராயணன், தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஆசிரியர் ஓய்வு பெற்றோர் நல சங்கம் கே.வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.