districts

img

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவர்களை கைது செய்க

திருவண்ணாமலை, ஜன. 10- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதி களில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தப்பட்டு வந்தது. தீபாவளி, பொங்கல் பண்டிகை சீட்டு நடத்தி இந்நிறுவனம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார்கள் வந்தன. கடந்த நவம்பர் மாதம் அந்த சூப்பர் மார்க்கெட்டை பொது மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து அந்த கட்டிடத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு உரியவர்களி டம் ஒப்படைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வந்தவாசி வட்டாட்சியர் அலுவ லகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், வட்டார நிர்வாகிகள் பெ.அரிதாசு, கி.பால்ராஜ், இரா.ராமகிருஷ்ணன், மாரி முத்து ஆகியோர் பேசினர்.