திருவண்ணாமலை, ஏப்.12- அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் வினாத்தாள் கள் முறையாக திருத்தாமல் அனைவருக்கும் குறை வான மதிப்பெண் வழங்கி யுள்ளதாகக் திருவண்ணா மலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணா நிதி அரசு கல்லூரியில் 7000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்த கல்லூரியில் உள்ள இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு வேலுர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவர்க ளின் மதிப்பெண் வெளியா கியுள்ள நிலையில், கல்லூரி யில் படிக்கும் பெரும் பாலான மாணவ மாணவி களுக்கு மதிப்பெண் 0 முதல் 10 மதிப்பெண் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த செமஸ்டரில் 80 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறி மாணவர்கள் திருவண்ணா மலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.