districts

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: மின்மாற்றி மாற்றம்!

திருவண்ணாமலை, ஜன. 25- திருவண்ணாமலை அடுத்த ஈச்சங்குப்பம் கிரா மத்தில் மின்மாற்றி பழுத டைந்து 2 மாதமாகியும், விவசாயிகள் பலமுறை முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் மின்மாற் றியை மாற்றி அமைக்க வில்லை. மாறாக பக்கத்து  மின்மாற்றியில் தற்காலிக மாக இணைப்பு கொடுத்த தால் அழுத்தம் தாங்காமல் இரவு, பகல் பாராமல் மின்தடை ஏற்பட்டது. மேலும்  அந்த மின்மாற்றியும் பழுதடையும் நிலையில் உள்ளது. இதனால் இரண்டு பகுதி  விவசாயிகளிடையே பகை  உருவாகும் சூழல் ஏற்ப ட்டது. எனவே உடனடியாக புதிய மின்மாற்றியை அமைக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலை மையில் மல்லவாடி மின் வாரிய அலுவலகம் செவ்வா யன்று (ஜன. 25) முற்றுகை யிடப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி யாக புதிய மின்மாற்றியை பொருத்தும் பணியில்  ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப் பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், ஒன்றிய தலைவர் சேட்டு, மாவட்ட துணை தலைவர் பலராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;