திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தாடி நொளம்பை மார்க்கத்தில் இயக்கப்பட்ட தடம் எண்: 5 மற்றும் சேத்துப்பட்டு - கோழிப் புலியூர் மார்க்கத்தில் இயக்கப் பட்ட தடம் எண்: 7 ஆகிய நகரப் பேருந்துகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், பழங் குடியின மக்களுக்கு அந்தோதியா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும், ரெட்டிக்குப்பம் மாணிக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மாணிக்கமங்கலம் கிராமத் தில் பொதுமக்களால் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைக்கு மின் இணைப்பு பெற வட்டாட்சியர் சான்று வழங்க வேண்டும், தாடி நொளம்பை ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும். பெரிய எளவந்தாங்கல் கிராமத்தில்க் தகன எரிமேடை அமைக்க வேண்டும், கோழிப் புலியூர் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், தவணி - நெடுங் குணம் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் உதயகுமார், வந்தவாசி வட்டாரத் தலைவர் ந.ராதாகிருஷ்ணன், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்திம் செயலாளர் பி.கே.முருகன், பெரணமல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் மாகவுதம்முத்து, மாதர் சங்க நிர்வாகி வாசுகி, இடைக்குழு உறுப்பினர்கள் இரா.ராஜசேகரன், ஜி.அறிவழகன், கிளைச் சொயலாளர்கள் சிவகுருநாதன், கே.பெருமாள் ஆகியோர் பேசினர்.