districts

img

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாலிபர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, டிச.3- ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தொகுப்பூதி யம், ஒப்பந்த ஊதியத்தில் பணிசெய்து வரும் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஒப்பந்த முறையை முற்றிலும் கைவிட வேண்டும், தமிழக அரசின் 115 , 152 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரு வண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலை வர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் லட்சு மணன், மாவட்டச் செய லாளர்  சிஎம்.பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், தமிழ்ச்செல்வன், ராஜா மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதேபோல் கள்ளக் குறிச்சி மாவட்டம், திருக் கோவிலூர் நகராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சிவக்குமார், செய லாளர் எம்.கே. பழனி, மாவட்டத் துணைத் தலை வர் வெங்கடேசன், வட்டச் செயலாளர் ஹரி உள்ளிட்ட உரையாற்றினர்.