செய்யாறு, ஜன. 23- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி நரசிம்ம நகரில் வசித்தவர் ஐயப்பன் (55). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். திங்கட்கிழமை பால் பாக்கெட் வாங்க ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யாறு பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஐயப்பன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது மகன் பிரேம்குமார் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.