districts

img

120 கிலோ குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை, மே 31- திருவண்ணாமலை அண்ணா நகர் 9ஆவது தெருவி லுள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நியமன அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாயன்று காலை அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஓரு வீட்டில் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.