districts

img

காங்கயம் இன மாடுகள் ரூ 29 லட்சத்துக்கு விற்பனை

திருப்பூர், ஏப்.12- காங்கயம் அடுத்த நத்தக்காடையூர், பழையகோட்டையில் காங்கயம் இன மாடு களுக்கான நடைபெற்ற சந்தையில் ரூ.29 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுக ளுக்கான நடைபெற்ற சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக் கல் போன்ற மாவட்டங்களிலிருந்து விவசாயி கள் விற்பனைக்காக மாடுகளை கொண்டு வரு கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலி ருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வரு கின்றனர். ஞாயிறன்று 134 கால்நடைகள் வந்தன. இதில், காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.69 ஆயிரம் வரை விற்பனையானது. பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை யானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது.  இச்சந்தையில் 72 கால்நடைகள் ரூ.29 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்த னர்.

;