districts

நூல் விலை உயர்வு பிரச்சனை: பிரதமரை சந்திக்க முடிவு

திருப்பூர், மே 6- பிரதிநிதிகள் குழு ஒன்றை கே.சுப்பராயன் எம்.பி., மூலம் ஏற் படுத்தி நூல் விலை பிரச்சனையில் பிரதமரை சந்திப்பது என்று திருப் பூர் அனைத்து பின்னலாடை தொழில் அமைப்புகளின் சார்பில் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் கடந்த மே 4ஆம் தேதி அனைத்து பின்னலாடை தொழில் அமைப்புகளின் நிர்வாகி கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத் தியாளர் சங்கம், தென்னிந்திய பின் னலாடை உற்பத்தியாளர் சங்கம், நிட்மா உள்பட பல்வேறு அமைப்பு களின் நிர்வாகிகள் கலந்து கொண் டனர். இதில் மே 2 ஆம் தேதி அனைத்து ரக பருத்தி நூல் விலை  கிலோவுக்கு ரூ.40 வீதம் அதிக ரிக்கப்பட்டிருக்கும் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.  பின்னர், எம்.பி. கே.சுப்பராயனை யும், இந்த பிராந்தியத்தின் மற்ற அரசியல் தலைவர்களையும் சந் திப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அவர்களிடம் திருப் பூர் பின்னலாடை  மற்றும் ஜாப் ஒர்க் தொழில் துறையின் துன்பங்களை எடுத்துரைப்பது என்றும், ஒரு பிரதி நிதிகள் குழுவை ஏற்படுத்தக் கேட் டுக் கொள்வது என்றும் தீர்மானிக் கப்பட்டது. அந்த குழுவினர் பிரதமர், தொழில் மற்றும் வர்த்தக அமைச் சர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்திப்பது எனவும், பஞ்சுக்கு தற்கா லிகத் தடை விதிக்க கோருவது, உள் நாட்டு தொழிலுக்குத் தேவையான நூல் கிடைப்பதை மதிப்பிட்டு உறு திப்படுத்துவது, அதற்கேற்ப வெளி நாட்டு நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிப்பது, பருத்தியை முன் பேர வர்த்தகப் பட்டியலில் இருந்து நீக்கி, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து அறிவிப்பது ஆகிய கோரிக்கைகளை அவர்க ளிடம் கேட்டுக் கொள்வது என்றும்  அனைத்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.