திருப்பூர், அக். 8 - திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் மூன்று பேர் பலியாகினர். சுற்று வட்டாரத்தில் சுமார் 20 வீடுகள் சேத மடைந்தன
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் பொன்னம்மாள் வீதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் திருவிழாவுக்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது செவ்வாய்க்கிழமை முற்பகல் அங்கு பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதனால் சுற்றியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்த வீடு வெடித்துச் சிதறியது. சுற்றிலும் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை ஓடுகள் சிதறின. சுவற்றிலும் வெடிப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாக னங்கள், அருகாமையில் வைக்கப்பட்டிருந்த வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உடைந்து சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர்.
ஆட்சியர், காவல் ஆணையர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்து ராஜ், மாநகர காவல் ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணித் துறை வாக னங்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கை யில் ஈடுபட்டன/ பாண்டியன் நகர் சுற்றுவட்டார பொதுமக்கள் பெருமளவில் அங்குதிரண்டனர்.
நிவாரணம் வழங்க நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசார ணை மேற்கொண்டுள்ளது. இதில் கார்த்திக், சத்திய பிரியா தம்பதியினர் தங்கள் உறவினர் சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்குத் தேவையான, கோயில் திருவிழாவுக்கான பட்டாசுகளை தயாரித்தனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சரவணகுமார் பட்டாசு தயாரிப்புக்கான உரிமத்தை ஈரோட்டில் பெற்றிருப்பதாகவும், ஆனால் சட்ட விதிமுறை களுக்கு புறம்பாக பாண்டியன் நகரில் உள்ள வீட்டில் வைத்து நாட்டு வெடி குண்டு தயாரித்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ள தாக மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித் தார்.
இந்த நாட்டு வெடிகுண்டு விபத்தின் காரண மாக அருகில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடு கள் சேதம் அடைந்துள்ளன. எனவே அதனை ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கும் பணியை மேற்கொண்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் தெரிவித்தார்.
மேலும் வெடி குண்டு தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இந்த விபத்தின் போது அருகில் இருந்த வர்கள் பலத்த சத்தம் கேட்டதாகவும், ஒரு உடல் சிதறி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த இடத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியவில்லை என சுற்றுப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை காவல்துறை யினர் திரட்டி வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி குமார் என்பவரும், 9 மாத ஆலிய செரின் என்ற குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இங்கு உடல் சிதறி இறந்த பெண்மணி யார் எனவும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.