திருப்பூர், மார்ச் 8-
தமிழக முதல்வர் விசைத்தறி கடன் தள்ளுபடி அறிவித்துள்ள நிலையில், பேங்க் ஆப் இந்தியா பல்லடம் வடுகபா ளையம் கிளையில், விசைத்தறியாளர் ரமேஷ் என்பவரின் விசைத்தறி கூடத்தை சுவாதீனம் செய்வதாக நெருக்கடி அளித் துள்ளனர். எனவே கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்கள் கிழமை வங்கி முற்றுகை போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், 7 ஆம் தேதி மாலை பல்லடம் காவல் நிலையத் தில் காவல் ஆய்வாளர், வங்கி மேலா ளர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள், சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.ஈஸ்வரன் மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் அப்புக்குட்டி ஆகியோரிடம் நடந்த பேச்சுவார்த்தையில், தேர்தல் நடைமுறை முடியும் வரையில் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று வங்கி மேலாளர் உறுதிமொழி அளித் ததை தொடர்ந்து, திங்களன்று நடைபெற இருந்த வங்கி முற்றுகை போராட்டம் ரத்து செய்யப்பட்டது.