districts

img

கியூபாவிற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் அனைத்து கட்சியினர் ஆர்வத்துடன் பங்கேற்பு

திருப்பூர், ஆக.5-  சோசலிச கியூபாவிற்கு ஆதரவாக திருப்பூரில் அனைத்துக் கட்சியினர்  ஆர் வத்துடன் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி, உணர்வுப்பூர்வமாக கையெ ழுத்திட்டனர். கொரோனா பெருந்தொற்றில் உல கைக் காக்க பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி உதவி செய்த சோசலிச கியூபா நாட்டிற்கு எதி ராக அமெரிக்க ஏகாதிபத்திய அரசு பொருளாதாரத் தடையை இறுக்கியுள் ளது. ஐ.நா. தீர்மானத்தை மதிக்காமல் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அமெரிக்க ஏகா திபத்தியத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், இந்திய அரசு கியூபாவிற்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க வலியுறுத்தியும், கியூப அரசுக்கும், அந் நாட்டு மக்களுக்கும் ஒருமைப்பாடு தெரி வித்து திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப் பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத் தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், திமுக மத்திய மாவட்ட செயலாளருமான க.செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கி ரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலை வர் ஆர்.கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாநகர் மாவட்டச் செய லாளர் ஆர்.நாகராஜ், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் என்.சையது முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஜெ.அபுசாலிக் உள்பட அனைத்துக்  கட்சியினர் இதில் பங்கேற்று, கியூபா விற்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஒன்றி ணைவோம் என்ற பிளக்ஸ் தட்டியில் கையெழுத்து இட்டனர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

;