districts

ராகுல்காந்தி இன்று திருப்பூர் வருகை

திருப்பூர், ஜன. 22 – காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி சனியன்று திருப்பூருக்கு வருகிறார். தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தரும் ராகுல்காந்தி அங்கிருந்து வேன் மூலம் திருப்பூருக்கு வருகிறார். பிற்பகல் 3 மணிக்கு அனுப்பர்பாளையம் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முன்பாக உரை யாற்றுகிறார். பிற்பகல் 4 மணிக்கு தியாகி குமரன் நினை வகத்தில் தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழில் துறையினர், தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி யில் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் இத்தகவலைத் தெரி வித்தார்.

;