திருப்பூர், ஜூலை 19- மனிதக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த் துவதைத் தடை செய்தல் மற்றும் மறு வாழ்வு சட்டதை உறுதியுடன் செயல் படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப் பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங் கிணைப்பில் வெள்ளியன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ் தலைமையில், மார்க்சிய, அம் பேத்கரிய, பெரியாரிய முற்போக்கு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத் திய பல்கலைக்கழகங்களில் துப்பு ரவு பொறியியல் துறையை துவங்க வேண்டும். மனித மாண்பை இழிவு படுத்தும் விதமாக தொடர்கிற விச வாயு மரணங்களை தடுக்க நிறுத்த வேண்டும். தமிழக அரசு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை தொடங்கிட வேண்டும். வெளிநாடுக ளில் பயன்படுத்தும் நவீன இயந்திரங் களை இறக்குமதி செய்து பயன்ப டுத்த வேண்டும், மனிதக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற் றும் மறுவாழ்வு சட்டதை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். விசவாயு மரணங்களுக்கும் சட்டப்படியான நிவாரணம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், ததீஒமு மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி, தமுஎகச மாவட்டச் செயலாளர் கே.குமார், திராவிடர் கழகம் யாழ்.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழகம் சண்.முத்துக்குமார், திராவிடர் விடு தலை கழகம் முகில் ராசு, ஆதித்த மிழர் பேரவை அவிநாசி க.மணி, ஆதித்தமிழர் சனநாயக பேரவை அ.சு.பவுத்தன், ஆதித்தமிழர் கட்சி கு. ஆறுச்சாமி, திராவிடர் தமிழர் கட்சி இரா.செந்தில்குமார், புரட்சி மக்கள் இயக்கம் அ.கார்த்திகேயன், புரட்சி கர இளைஞர் முன்னணி தமிழ் அமு தன், மக்கள் பாதுகாப்பு இயக்கம் கார்மேகம் ஆகியோர் கோரிக்கை கள் குறித்து பேசினர்.
இதில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன், மாதர் சங்க மாவட்டத் தலை வர் பவித்ரா, சிஐடியு சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.