districts

img

பெட்ரோல் விலையேற்றம்: ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 14 -

திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழி லாளர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோலிய பொருட்கள் மீது அநியாயமாக போடப் பட்டுள்ள  வரியினை திரும்ப பெற்று, விலை குறைய வழி  செய்ய வேண்டும். பெட்ரோல் லிட்டர் ரூபாய் 50திற்க்கும், டீசல் லிட்டர் ரூபாய் 40திற்க்கும் வழங்க இந்திய ஒன்றிய அரசை வலி யுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த ஆர்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட தலைவர் கே.சுரேஷ் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொது செய லாளர் என்.சேகர், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் எஸ்.ரவிச் சந்திரன்,  மோட்டார் சங்க மாவட்ட துணை செயலாளர் சக்தி வேல், மோட்டார் சங்க துணை தலைவர் மகேந்திரகுமார் உள் ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

;