districts

உடுமலை கல்லாபுரம் கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு

திருப்பூர், ஜன. 12 - உடுமலை வட்டம் கல்லாபுரம் கிராமத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர், உடுமலை வட்டம் பூலவாடி புதுநகர், கல்லாபுரம் பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கல்லாபுரம் கிராமத்தில் 150 குடும்பங்கள் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், அவ்விடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி அரசிடம் பல முறை மனுக் கொடுத்தும், பட்டா வழங்கப்படவில்லை. இப்பகுதியில் வசிப்போர் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் ஏழைக் குடும்பத்தினர் ஆவர். எனவே, குடிசை அமைத்து வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;