திருப்பூர், ஜூலை 16- கொழுமம், ஆத்தூர், முத்துகுளம், கோதை அம்மாள் குளம், கிணத்துக்கடவு, கோதவாடி, குயவன் குட்டை ஆகிய குளங் களில் மண் எடுக்க அனுமதி வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித் தனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, உடுமலை நஞ்சேகவுண்ட புதூர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். மண் கலசம், சிறிய ரக பொம்மைகள், மண் விளக் குகள், தீச்சட்டி, உள்ளிட்ட மண்பாண்டங் களை செய்யும் தொழில் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசு விவசாயம் மற்றும் மண்பாண் டம் செய்வதற்கு ஆற்றுப்பகுதியில் மண் எடுத் துக் கொள்ளலாம் என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கொழுமம், ஆத்தூர், முத்துகுளம், கோதை அம்மாள் குளம், கிணத்துக்கடவு, கோத வாடி, குயவன் குட்டை ஆகிய குளங்கள் அரசு அறிவித்த அரசிதழில் வரவில்லை. இந்தக் குளங்களில் கிடைக்கும் களிமண் மண்பாண் டங்கள் செய்ய உகந்த மண்ணாக உள்ளது. சென்ற ஆண்டு இக்குளங்களில் மண்ணெ டுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். அதேபோல் இந்த ஆண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.