திருப்பூர், நவ.27 - பொங்கல் பண்டிகைக்குள் பட்டுக்கோட் டையார் நகர் மக்களுக்கு பட்டா வழங்கப்ப டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் உறுதியளித்தார். திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு பட்டுக்கோட்டையார் நகரில் வடக்கு பகுதி யில் குடியிருக்கும் 192 குடும்பத்தாருக்கு பட்டா கோரி கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இப் பிரச்சனையில் பட்டுக்கோட்டையார் நகர் குடி யிருப்போர் நலச்சங்கம் பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.
எனினும் பட்டா வழங்குவதற்கு நில வருவாய் ஆணை யர் அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுக் காமல் காலதாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 27 புதன்கிழமை பட்டா கிடைக்கும் வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கி இருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக குடியிருப்போர் நலச்சங் கம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. அதன்படி புதன்கிழமை நூற்றுக்கும் மேற் பட்ட மக்கள் குடியிருப்போர் நலச்சங்க நிர்வா கிகள் தலைமையில் பட்டுக்கோட்டையார் நக ரில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கிப் புறப்பட்டனர். அப்போது மாநகர காவல் துறையினர் 50க்கும் மேற்பட் டோர் பட்டுக்கோட்டையார் நகர் நுழைவுப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
காவல்துறை வாகனத்தை பாதையின் குறுக்காக நிறுத்தி வைத்தனர். பட்டுக்கோட்டையார் நகர் மக் களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். இதை யடுத்து அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பி தர் ணாவில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சம்பந்தப் பட்ட இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு கட்டத்தில், வாரந் தோறும் இப் பிரச்சினையை எடுத்து போராட் டம் நடத்துவீர்களா என்று வட்டாட்சியர் கேட்க, அங்கிருந்த மக்கள் ஆவேசம் அடைந் தனர். வட்டாட்சியரே வெளியேறு என்ற முழக் கத்தை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர் அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்று தனியே நின்றார்.
காவல்துறை உதவி ஆணை யர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, காவல் துறை வாகனத்திலேயே அழைத்துச் செல்வதாக தெரிவித்தனர். பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உட் பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல் துறை வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத் திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியரக பேருந்து நிறுத்த நிழற்குடையில் அந்த மக் கள் அமர வைக்கப்பட்டனர்.
பட்டுக்கோட்டை யார் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் என்.சேகர், செயலாளர் எஸ்.சுந்தரம், பொரு ளாளர் கு.நா.தங்கராசு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆறு குட்டி, கோவிந்தராஜ், செந்தில்குமார், கதிரேசன், வேலுச்சாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அறைக் குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டுக்கோட்டையார் நகர் மக்களுக்கு பட்டா வழங்க இதுவரை மேற்கொண்டிருக்கும் நட வடிக்கைகளை தெரிவித்த மாவட்ட ஆட்சி யர், வரும் பொங்கல் பண்டிகைக்குள்ளாக அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் இருக்கும் குடும்பத்தார் பட்டியல் கொடுத்தால் அவர்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கு, வட்டாட்சியர் தடையின்மை சான்று வழங்கி உரிய நடவடிக்கை எடுப்பதா கவும் உறுதியளித்தார். நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வரை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பட் டுக்கோட்டையார் நகர் மக்களுக்கு காவல்து றையினர் உரிய பாதுகாப்பு வழங்கி உப சரித்தனர். பின்னர் ஆட்சியர் தெரிவித்த விபரங்கள் அந்த மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. பொங் கல் பண்டிகைக்குள் பட்டா மற்றும் மின் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதாக உறுதியளித்ததை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் அமர்வது என்ற போராட்டத்தை முடித்துக் கொண்டு அந்த மக்கள் கலைந்து சென்றனர்.