districts

img

மாமேதை லெனின் பிறந்தநாளை முன்னிட்டு அனுப்பர்பாளையத்தில் லெனின் உருவ படத்துக்கு மரியாதை

திருப்பூர், ஏப். 22-

எல்லோருக்கும் எல்லாமும் என்கிற மார்க்சிய சிந்த னையை சோவியத் ரஷ்யாவில் நிகழ்த்திக் காட்டிய பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தலைமை தாங்கிய தோழர் லெனின் 151  ஆவது பிறந்த நாள் திருப்பூரில் கடைபிடிக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை, அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 15. வேலம்பாளையம் நகரக் குழு அலுவலகம் முன்பாக  மாமேதை லெனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரி யாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிர மணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப் பினர் பி. சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;