திருப்பூர், ஏப்.4- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் நீர்நிலை புறம்போக்கு என்ற அடிப் படையில் குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதை யடுத்து சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் அந்த இடங்களை காலி செய்யாமல் இருக்க வும், முறையான மாற்று இடங்கள் வழங்க வும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ள னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினீத் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். உடுமலை பள்ளப் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், உடுமலை பள்ளப் பாளையம் பகுதியில் எங்களின் குலதெய்வ மான கருப்பராயசாமி கோவில் உள்ளது. இதன் அருகே மேலும் சில கோவில்கள் உள்ளன. 150 ஆண்டுகளுக்கு மேலாக செங்குளம் குளக்கரையின் மேடான பகுதி யில் கோவில் அமைந்துள்ளது. தற்போது அந்த பகுதியில் வீடுகள் அமைத்துள்ளவர் களை காலி செய்யுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி யுள்ளனர். குளம் அருகே குடியிருப்பு வீடு கள் இல்லை. கோவில் மட்டுமே உள்ளது. எனவே தொடர்ந்து அந்த கோவிலில் வழி பாடு செய்யவும், அதே பகுதியில் நாங்கள் வசிக்கவும் ஆவண செய்ய வேண்டும் என்ற னர். திருப்பூர் மாநகராட்சி 34ஆவது வார்டு கவுன்சிலர் பி.ஆர்.செந்தில்குமார், ஆதித் தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலை வர் பவுத்தன் மற்றும் பாளையக்காடு பகு தியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு வில் கூறியிருப்பதாவது, பாளையக்காடு ஆத்துமேடு பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
குடும்ப அட்டை, ஓட்டு நர் உரிமம், ஆதார் அட்டை, மின் இணைப்பு என அனைத்து ஆவணங்கள் எங்களது 140 குடும்பங்களுக்கும் உள்ளது. இதில் 80 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் ஆகும். மீதம் மற்ற சமூ கத்தை சேர்ந்த பிரிவினர் உள்ளனர். இந் நிலையில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணரை வாய்க்காலில் எந்தவித அனுமதி யும் பெறாமல் நாங்கள் வீடுகள் கட்டி குடி யிருந்து வருவதாகவும், வீடுகளை உடனே காலி செய்யுமாறும் நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. இதனால் நாங்கள் வேதனை யில் உள்ளோம். எனவே எங்களுக்கு கூடு தலாக காலஅவகாசம் வழங்க வேண்டும். மாற்று இடம் வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்தி டம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் காளி பாளையம் விஸ்வநாதன் மற்றும் பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது, அவினாசி அருகே கொன்னக்காடு ஏ.டி. காலனியில் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் வீட்டு வசதி துறையின் கீழ் கடந்த 1990 ஆம் ஆண்டு வீடுகள் கட்டப்பட்டது. இதில் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் தற்போது 26 வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், 15 நாட்களில் இதனை காலி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே எங்க ளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மாதப்பூர், செந்தில்நகர், லட்சுமிநகர், நெல்லை முத்துநகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, பல்லடம் தாலுகாவில் உள்ள பொங்கலூர் ஒன்றியத்தை சேர்ந்த மாதப்பூர் பஞ்சா யத்தை சேர்ந்த செந்தில்நகர், லட்சுமிநகர், நெல்லை முத்துநகரில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். 70 குடும்பங்கள் 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது வரை இந்த பகு தியில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே இது தொடர்பாக நட டிவக்கை எடுக்க வேண்டும், என்றனர். திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது, 56ஆவது வார்டு சந்திராபுரம் அம்மா உணவகம் எதிரில், சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த வலிமை யான வாகை மரம் இருந்தது.
இந்நிலையில் இந்த மரத்தை இரவோடு இரவோக வெட்டி அகற்றியுள்ளனர். இதனை வெட்டியவர் கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கணபதி பாளையத்தில் 35 பயனாளிகளை அரசு தேர்வு செய்து பட்டா வழங்கியுள்ளனர். தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யவில்லை. எனவே முறையான விசாரணை நடத்தி, தகு தியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர். வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், அவி னாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பிய நல்லூர் ஊராட்சி மஜரா வெள்ளியம் பாளையத்தின் மெயின் ரோட்டில் இருந்து வெள்ளியம்பாளையம் உள்ளே செல்லும் சாலையின் இடதுபுறமாக உள்ள ராயன் காடு குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மழை நீர் வடிகால் அமைக்க தாமதம் செய்து வரு கிறார்கள். எனவே விரைவாக மழைநீர் வடி கால் அமைத்து கொடுக்க வேண்டும். என்றிருந்தனர். நல்லூர் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முக சுந்தரம் கொடுத்த மனுவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக் மறை முகமாக திருப்பூர் மாவட்டத்தில் மளிகை கடை மற்றும் ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் மூலமாக பேக்கிங் நடந்து வரு கிறது. மேலும், கறிக் கடைகளிலும் கேரிபேக் மூலம் இறைச்சிகள் கொடுக்கப்பட்டு வருகி றது. எனவே பிளாஸ்டிக் டம்ளர், கேரிபேக் விற்பனை செய்கிற வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.