districts

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

திருப்பூர், பிப். 25 -

திருப்பூர் 19ஆவது வார்டு பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்வதுடன், புதிய பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி போராட்டம் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அதி காரிகள் உறுதியளித்தபடி தெரு விளக்குகள் சரி செய்யப் பட்டு, புதிய பகுதிகளிலும் தெரு விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. நெருப்பெரிச்சல் மற்றும் ஜி.என்.கார்டன் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த வாரம் சாலைகளை செப்பனிடுவதுடன், தெரு விளக்குகளையும் சரி செய்யும் கோரிக்கைகளை முன்வைத்து நாற்று நடும் போராட்டம் நடத்தியது. அத்துடன் மண்டல அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் தெருவிளக்குகளை சரி செய்து, புதிய தெரு விளக்குகளும் அமைக்கும் கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது. எரியாத தெரு விளக்குகளை கடந்த  திங்கள் கிழமை சீர் செய்தனர். அத்துடன் புதன்கிழமை புதி தாக 15 தெரு விளக்குகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த கோரிக்கையை நிறை வேற்றியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜி.என்.கார்டன் பகுதி பொது மக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழுதான சாலையை செப்பனிடும் கோரிக்கையையும் நிறை வேற்றுமாறும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது

;