districts

img

குப்பாண்டம்பாளையம்: சமுதாய நலக்கூடத்தை சீரமைத்திட கோரிக்கை

திருப்பூர், ஜன. 6 – திருப்பூர் மாநகராட்சி 54 ஆவது வார்டு வீரபாண்டி குப்பாண்டம்பாளையம் பகு தியில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பயன் பாட்டுக்கு கொடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குப்பாண்டம்பாளையம் கிளைச் செயலா ளர் எஸ்.குமார், தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து  வருகின்றனர். இங்குள்ள பொதுக்க ழிப்பிடம் மிகவும் மோசமாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் சரியாக வருவதில்லை. எனவே பொதுக் கழிப்பிடத்தைச் சீரமைத்துத் தர வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகை யில் அப்பகுதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டில் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. அந்த சமு தாயக் கூடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

;