districts

img

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கபசுர குடிநீர் தொடர் முகாம்

திருப்பூர், மே 18-

திருப்பூர் மாநகராட்சி 29 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஓடக்காடு பகுதியில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் அப்பகுதி மக்க ளுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் ஹோமியோ மருந்து  ஆர்சனிக் ஆல்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் ஓடக்காடு கிளை தலைவர் தியாகரா ஜன், செயலாளர் வி.மணி கண்டன், பொருளாளர் விஷ்ணு சங்கர், நிர்வாகி கள் ஆட்டோ செல்வம், ஆடிட்டர் சுரேஷ் குமார் உள் ளிட்டோர் கடந்த ஒரு வார காலமாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓடக்காடு முழுவதும் ஒவ்வொரு பகுதி யாக தலா மூன்று நாட்கள் வீதம் கபசுர குடிநீர், ஆர்ச னிக் ஆல்பம் ஹோமியோ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.  

இம்முகாமில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், கிளைச் செயலாளர் ஆர்.சிவ.சண்முகம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.குணசேகரன், ஏ.சங்கர் உட் பட மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்று வாலிபர் சங்கத்தி னருக்கு பாராட்டு தெரி வித்தனர்.

;