திருப்பூர், அக். 24 – நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பிறகுதான் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற கருத்து விவசாயிகள் மனதில் ஆழமாக பதியப் பட்டுள்ளது. ஆனால் சொந்த அனுபவத் தில் அது உண்மையில்லை என்று ஆதாரத்துடன், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்தி ருக்கும் விபரம் வருமாறு: 100 நாள் வேலை திட்டத்தை தற்போது தனி யொரு விவசாயி தோட்டத்தில் நடை பெறும் குறிப்பிட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தலாம் என்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. அந்தந்த ஊராட்சிகளின் மூலம் விவசாயிகள் தங் களது நில உரிமைச் சான்றுகளோடு பதி வுசெய்து ஆட்களும் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகிறது. சென்னி மலை ஒன்றியம் பசுவபட்டி கிராமத்தில் பொன்னையன் குடும்பத்திற்கு சொந்த மான 9.6 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பொன்னையன் மற்றும் அவரது மகள் வழக்கறிஞர் நர்மதா ஆகியோருக்கு பாகப்பிரிவினை செய்யப்பட்டு பயன்ப டுத்தி வருகின்றனர். இவர்களது நிலத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் வேலை செய்ய பதிவு செய்து வைத்த னர். அரசு கணக்கீட்டின்படி இவரது நிலத்தில் 974 மனித நாட்கள் வேலை செய்துள்ளனர். ஒவ்வொருவரும் தவ றாமல் வந்த ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் துல்லியமாக வேலை செய்த னர் அப்படியானால் அவர்கள் வேலை செய்தது 1948 மணி நேரம் ஆகிறது. இதை கூலி கொடுத்து செய்கின்ற ஆட்களின் வேலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். விவசாயத் தொழிலாளர் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வேலை செய்கின்றனர் என்று வைத்துக் கொள்ளலாம். அதன்படி 1948 மணி நேரத்தை 6 ஆல் வகுத்தால் 324 ஆட்கள் வேலை செய்ய வேண்டும். அப்பகுதியில் பெண்களுக்கு கூலி ரூ. 300 ஆகும். இதன்படி 324 பேருக்கு கொடுத்திருக்க வேண்டிய கூலி ரூ. 97 ஆயிரத்து 200 ஆகும். அதாவது கூலி யாக சுமார் ரூ.1லட்சம் வருகிறது.
இதன்மூலம் இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்ட ஆட்கள் மூலமாக தங்கள் தோட்டத்தில் சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள வேலைகள் செய்யப்பட்டு, தங்கள் குடும்பத்திற்கு கூலி செலவு மீதப்படுத்தப்பட்டுள்ளது என்று பொன் னையன் தெரிவித்துள்ளார். எனவே 100 நாள் வேலை திட்டம் விவசாயத்தை அழிக்கவந்தது போல ஒரு தவறான கருத்து விவசாயிகளிடையே பரப்பப் பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கூலி ஆட்கள் பிழைப்புத் தேடி கிராமத்தை விட்டே வெளியேறி இருப் பார்கள். திருப்பூர் தொழிலுக்கு அல்லது சுற்றுவட்டாரத்தில் உள்ள வேறு பல வேலைகளுக்கு சென்றிருப்பார்கள். சொந்த ஊரில் நிலத்தில் வேலை செய் யும் பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லா மல் போயிருப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார். அரசு 100 நாட்களுக்கு வேலை கொடுக்கிறது. மீதி 165 நாட்களும் விவ சாய இதரப் பணிகளை செய்வதற்கு அந்த மக்கள் இங்கேதான் இருக்கின்ற னர். 300 ரூபாய்க்கு கிடைக்கிற வேலைக்கு போய்விட்டு வேலை இல் லாத நாட்களில்தான் விவசாய தொழி லாளர்கள் 100 நாள் வேலைக்கு செல் கின்றனர். வேளாண் பணிகள் இருக் கும்போது அவர்கள் அந்தப் பணிக்கு வந்து விடுகிறார்கள். வேளாண் பணி கள் இல்லாதநேரத்தில் பிழைப்புக்கான வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது. அதேசமயம் விவசாயிகளுக்கும் ஆண்டொன்றுக்கு கணிசமான கூலியை மீதப்படுத்திக் கொள்வதற்கும் இது வழிவகை செய்திருக்கின்றது என் பதனை தனது அனுபவம் உணர்த்துவ தாக கி.வே.பொன்னையன் தெரிவித் துள்ளார்.