districts

img

திருப்பூரில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை; கட்டுபடுத்த மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 26 - திருப்பூர் மாநகரில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் கோம் பைத்தோட்டம் பகுதியில் பத்துக்கும் மேற் பட்டோரை தெரு நாய்கள் கடித்தன. பாதிக் கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். தொழில் நகரமான திருப்பூரில் தெரு  நாய்கள் அதிகளவு சுற்றி வருகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் முறை யாக அகற்றப்படாமல் தேங்கியிருப்ப தும்,சாக்கடை கழிவுகள் சுத்திகரிக்கப்படா மல் இருப்பதும் நாய்களின் உணவுக்கான இட மாக மாறிப் போகின்றன. நாய்களைப் பிடிக்க வும் புளூ கிராஸ் உள்ளிட்ட விலங்கு ஆர்வ லர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று  மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளா மல் விட்டு விடுகிறது. இதனால் அதிகளவில்  நாய்கள் இனப்பெருக்கம் ஏற்பட்டு அனைத் துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித்  திரிகின்றன. இதனால் குழந்தைகள், பள்ளி  செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச்  செல்லும் பெண்கள், முதியோர் என பல ரும் நாய் கடிக்கு ஆளாக நேரிடுகிறது.

அது வும் திருப்பூர் நகரில் சாலைகள் இருக்கும் நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரு கின்றன. இந்த நிலையில் தெரு நாய் கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் பல் வேறு மருத்துவமனைகளுக்கு நாய் கடிக்கு  சிகிச்சைக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட  44, 45ஆவது வார்டு பகுதிகளில் பத்துக்கும்  மேற்பட்டவர்களை கடித்த தெரு நாய்களை, திருப்பூர் மாநகராட்சி பணியாளர்கள் திங்க ளன்று பிடித்துச் சென்றனர்.  நாய் கடியில் படு காயம் அடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்நிலையில் தெரு நாய்களை பிடிக்க  பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை வலி யுறுத்தினர். இதைத் தொடர்ந்து திங்களன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் வலை போட்டு நாய்களைப் பிடித்து சென்றனர். இத னால் கோம்பைத்தோட்டம் பகுதியில் ஏற் பட்ட அச்சம் நீங்கியது. மேலும் இதே போன்று  பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவ தால் தெரு நாய்களை பிடிக்க வேண்டும்  என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நாய் கடிக்கு அனைத்து அரசு  மருத்துவமனை, சுகாதார நிலையங்களி லும் போதிய மருந்துகள் இருப்பு வைத்திருப் பதையும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உத் தரவாத படுத்த வேண்டும் என மக்கள் எதி பார்கின்றனர்.