districts

திருப்பூர் மாவட்டத்தில் 238 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பூர், ஏப்.22-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 238 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகினர். இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. மற்றும் திருப்பூர் அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 973 ஆக உயர்ந்துள்ளது. புதனன்று  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 244 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக உள்ளது. 2234 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 60  வயது பெண் சிகிச்சை பலனின்றி புதனன்று இறந்தார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

;