districts

img

நூல் மில்லில் தீ விபத்து

திருப்பூர், ஏப்.16- வெள்ளக்கோவில் அருகே உள்ள நூற்பாலையில் திடி ரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீர்ர்கள் 2 மணி நேரம் போரடி தீயை அணைத்தனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் மூர்த்தி (45). இவர் ,கரூர் வெள்ளக்கோவில் ரிலையன்ஸ் பெட் ரோல் பங்க் அருகே கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், வியாழனன்று காலை 7 மணியளவில் மில்லில் திடீரென கரும்புகை வெளியே றியது.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீர்ர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்த னர். இருப்பினும் நூல், இயந்திரம், கட்டடம் உள்ளிட்டவை எரிந்து சேதமானது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட தாக தெரிகிறது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

;