districts

img

நெற்பயிர்கள் பாதிப்புக்கு இழப்பீடு கோரி திருப்பூர் ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருப்பூர், டிச.9- மடத்துக்குளம் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயி கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முற்றுகையிட்டு மனு  அளித்தனர்.இப்பிரச்சனையில்  விவசாயிகளின் தற்போதைய சூழ லைக் கருத்தில் கொண்டு விவசாய  கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் வலியு றுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப் பன் தலைமையில் 50க்கும் மேற்பட் டோர் வந்து ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். 

அமராவதி பிரதான பாசனப் பகுதிக்கு உட்பட்ட புதிய ஆயக்கட்டு  பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் நெல்  பயிரிடப்பட்டிருந்தது. இதில் 25 இருந்து 90 சதவீதம் வரை நடவு செய்து 40 நாட்கள் வரையான பயிர் கள், இனம் தெரியாத நோயால் கருகி யுள்ளன. இப்படிப்பட்ட நோயை நாங்கள் இதுவரை கண்டதில்லை.

வேளாண்மை துறையும் ஆலோ சனைகள் வழங்கவில்லை. மேலும்  உள்ளூர் உரம் மற்றும் பூச்சி மருந்து  கடைகளில் இந்நோயைக் கட்டுப்ப டுத்த மருந்துகள் கிடைக்கவில்லை.  இதனால் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம்  முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு  செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர் வீணாகிவிட்டது. 50 சதவீதத்திற்கு மேல் பாதித்துள்ள நெற்பயிர்களுக்கு செலவு செய்து பூச்சி மருந்து, உரங்கள் கொடுத்தாலும் ஒரு ஏக்கருக்கு 1200 கிலோ நெல்கூட விளையாது. எனவே 50 சதவீதத் திற்கு மேல் பாதித்துள்ள வயல்க ளுக்கு உடனடியாக அழித்துவிட்டு  மீண்டும் நடவு செய்ய வேண்டியுள் ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப் பீடு வழங்க வேண்டும். மேலும் அம ராவதி அணையில் முழு கொள்ளளவு  தண்ணீர் உள்ளதால், 120 நாட்க ளுக்கு புதிய ஆயக்கட்டு பகுதிக ளுக்கு தண்ணீர் விட வேண்டும் என  மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கடன் தள்ளுபடி கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.ஜெயபால் மற்றும் ச.நந்த கோபால் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, 

மடத்துக்குளம் நெற்பயிர் நோய்த் தாக்குதலால், 500க்கும் மேற் பட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு  ஆளாகியுள்ளனர். கடந்த 8ஆம் தேதி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட  விவசாயிகள் மற்றும் விவசாய சங்க  நிர்வாகிகளுடன் கலந்துரையாடி னர். மேலும் இந்த பாதிப்பை சரி  செய்ய சில பரிந்துரைகளை முன்  வைக்கின்றோம்.  50 சதவீதத்திற்கு  மேல் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு உரிய மதிப்பீடு செய்து நிவார ணம் வழங்க வேண்டும். தற்போது முட்டுவழிச் செலவு உட்பட சாகு படிக்காக பயிர்க்கடனாக கூட்டுறவு  மற்றும் வங்கியில் ரூ.1 லட்சம் வரை  பயிர் கடன் பெற்றுள்ளனர். விவசாயி களின் தற்போதைய சூழலை கருத் தில் கொண்டு கடன் தள்ளுபடி செய்ய  வேண்டும். ஒரு பகுதி விவசாய நிலங் களில் மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் உதவி செய்தால் கடன் நெருக்கடியில் சிக் காமல் இருக்க உதவும். குறிப்பாக,  ஜிங் சல்பேட் உள்ளிட்ட உரங்கள்,  மறுவிதைப்புக்கான விதைகள் ஆகி யவற்றை மானியமாக வழங்கினால் நெல் உற்பத்தியை மீண்டும் தொடங்க முடியும். அமராவதி ஆற் றில் மறு சாகுபடிக்காக சிறப்பு கவ னத்தோடு மீண்டும் 90 நாட்கள் வரை  நீர் திறந்து விடுவதன் மூலம், அந்த  பகுதி விவசாயிகளின் பயிர் சாகுப டியை முழுமையாக பாதுகாக்க முடி யும். எனவே விவசாயிகளின் வாழ்வா தாரம் மற்றும் மக்களின் தேவைக் கான உணவு உற்பத்தி சாகுபடி பாதிக் காமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.