districts

img

நானூறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் கம்பீரமாய் நிற்கும் மாலகோயில்கள்

உடுமலை, டிச.26 - மனித வாழ்வின் அனைத்து சமூக  நிகழ்வுகளையும் புடைப்புச்சிற்பங்க ளாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ள மால கோயில்கள், நானூறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் கம்பீரமாய் நிற்கிறது.   பொம்மநாயக்கன்பட்டி, உடும லையிலிருந்து வடக்கில் சுமார் 28 கி.மீ.  தொலைவில் உள்ளது. உடுமலை மற் றும் உடுமலையைச் சுற்றிலும் ஏராள மான மாலகோயில்கள், உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினரால்   ஆவ ணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகை யில் எலையமுத்தூர், மெட்ராத்தி, பண் ணைக்கிணறு, ஜிலேப்பநாயக்கன் பாளையம், வாகைத்தொழுவு, கோட்ட மங்கலம், சிஞ்சுவாடி, ஜோத்தம்பட்டி,  கரப்பாடி என பல்வேறு இடங்களில்  இருக்கும் மாலகோயில்கள் அனைத் தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லா இடங்களிலும் ஐந்த டுக்கு முதல் 16 அடுக்கு வரையிலும்  மனித வாழ்வின் அனைத்து சமூக நிகழ் வுகளையும் புடைப்புச்சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளனர்.  இவை அனைத்தும் கடந்த காலங்களில் மக்கள்  வாழ்க்கை முறைகளையும் அவர்களின்  போர் முறைகளையும், கால்நடை களோடு அவர்கள் கொண்டிருந்த பிணைப்பினையும் இந்த கல்வெட் டுகள் உணர்த்துகின்றன. அந்த வகையில் இந்த பொம்மநா யக்கன்பட்டி மாலகோயில் புடைப்புச் சிற்பமும், ஒரு குதிரையில் வீரன் அமர்ந் திருப்பது போலவும், இவருடன் இரு வர் துணையாக இருப்பது போன்றும் அணிகலன்கள், ஆபணரங்கள், மார்புக் கச்சைகள் எதுவும்  இல்லாமல் அற்புத மாக புடைப்புச்சிற்பம் அமைக்கப்பட் டுள்ளது. இன்னொரு புடைப்புச்சிற்பத் தில் ஆண், பெண் இருவர் வேட்டைக் குச்செல்வது போன்றும் அவர்களுடன் ஆடு, மாடு உடனிருப்பது போன்றும், இன்னொரு மடிப்பில் ஆண், பெண்  இருவரும் வழிபடுவது போன்றும்,  மூன்றாவது கடைசி மாலையில் பல் லக்கு வைத்து இருவர் தூக்கிச்செல்வது போன்று புடைப்புச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் மனித சமூக வாழ்வியலை உணர்த்துவதாக இருப் பதாக இதனைஆய்வு செய்த வரலாற் றுப்பேராசிரியர் செ.ராபின், பொள் ளாச்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்து றைப்பேராசிரியர் முனைவர் முனியப் பன், பாரதியார் நூற்றாண்டு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனை வர் விஜயலட்சுமி ஆகியோர் தெரிவித் தனர்.