districts

தேர்தல் விதிமுறை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

திருப்பூர், மார்ச். 2-  

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் சம்பந்தபட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வா கம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடன டியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்குகளிலோ படைக் கள சட்டப்படி ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். துப்பாக்கிகளை ஒப்ப டைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்பந்தப் பட்ட காவல் நிலையத்தில் வழங்க வேண்டும். மேலும் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி யான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப் பட்டுள்ளது.

;