திருப்பூர், மார்ச் 1 - திருப்பூர் மாவட்டம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் வேலை செய்யும் கால்நடை மருத்துவர் சரியாக வேலைக்கு வருவதில்லை என்றும், நோய்வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் வர மறுப்பதாக வேலம் பட்டி பாப்பன் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.பரம சிவம் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகார் மனுவில், கால்நடை மருத்துவர் சிகிச்சை அளிக்க வர மறுப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், கால்நடைகளை தனியார் மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள் ளார். மேலும் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நேரடியாக தோட்டத்திற்கு வந்து சிகிச்சை அளிக்கிறேன் என்றும் மருத்துவர் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போதுள்ள கால்நடை மருத்துவர் மீது துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் வேறு கால் நடை மருத்துவரை வேலம்பட்டி கால்நடை மருத்துவமனை யில் நியமிக்க வேண்டும் என்றும் விவசாயி பரமசிவம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.