districts

வீட்டுமனைப்பட்டா பெற்றுத்தருவதாக கூறி பணம் வசூலிப்பு

அவிநாசி, மே 12- அவிநாசி அருகே கருவலூர் பகுதியில் வீட்டுமனை பெற் றுத் தருவதாக கூறி செவ்வாயன்று  பணம் வசூலித்த நபர் மீது கிராம நிர்வாக அலுவலர் புகார் தெரிவித்துள்ளார். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் சுமார் இரண் டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்த நிலையில் அண்ணா நகர், சிஎஸ்ஐ காலனி, உள் ளிட்ட இடங்களில் ஒரு சில குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா,  வீட்டுமனை இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இதனை அறிந்த திருப்பூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்க முத்து என்பவர் பகுதிகளுக்குச் சென்று  வீட்டு மனை பட்டா, வீட்டுமனை, உள்ளிட்டவை பெற்றுத் தருவதாக கூறி, 200 முதல் 500 வரை வசூல் செய்துள்ளார். இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வசூல் செய்த நபர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள் ளார். இப்புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;