districts

img

காங்கேயம் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

திருப்பூர், ஏப்.12- கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக காங்கேயம் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில்  நகராட்சி நிர்வாகம் சார் பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக காங்கேயம் பேருந்து நிலையம், தினசரி சந்தை, கடை வீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் ஞாயிறன்று நக ராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடை பெற்றது. பேருந்து நிலையக் கடைகள், தினசரி சந்தை பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வணிகர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பேருந்து நிலையத் தில் நின்று செல்லும் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக் கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.  இந்த தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி ஆணையர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

;