districts

img

வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

திருப்பூர், ஜன. 27– தமிழ்நாட்டில் வருவாய்த் துறை யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரு வாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட் டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இதர வருவாய்த்துறை அலு வலகங்களில் பணிபுரியும் வட்டாட் சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை உள்ள 250-க்கும் மேற்பட்ட வரு வாய்த்துறை அலுவலர்கள் புதனன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ச.முரு கதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோபிசெட்டிப்பாளையம் இதேபோல் கோபிசெட்டிப்பாளை யம் கோட்டத்திற்குட்பட்ட ஆறு தாலு காவில் பணியாற்றும் வருவாய்த் துறை யினர் 200க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 140 ஊழியர்கள் உட்பட மாவட் டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வரு வாய்துறை ஊழியர்கள் பணியை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

;