districts

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அவிநாசி, மே 18-

அவிநாசியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் திங்கயன்று இரவு கைது செய்யப்பட்டனர். அவிநாசி காவல் சர கத்திற்கு உள்பட்ட பகுதி களில் வழிப்பறி, கொள்ளை முயற்சி உள்ளிட்ட வழக்கு களில் தொடர்புடைய வள்ளு வர் வீதி ஆரோக்ய செல்வ ராஜ் மகன் ஜோயல் சித்தார்த் (22), திருப்பூர் பெரியாயி பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த வெள்ளைச் சாமி மகன் செல்லத்துரை (35), திண்டுக்கல் வீரப்பன் மகன் செல்வராஜ் (23), திருப்பூர் காங்கயம் சாலை சுந்தர்ராஜ் மகன் கார்த் திக் (23) ஆகியோர் கடந்த இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் உத்தரவின் பேரில், இவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்ட னர்.

;