திருப்பத்தூர், பிப். 19 - ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் குளிக்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட த்தில் உள்ள சுற்று லாத் தலங்களில் ஜலகம் பாறை நீர்வீழ்ச்சி முக்கிய மானது. இங்கு, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ கம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணி கள் வருகை தந்து, நீர் நிழ்ச்சியில் குளிப்பது வழக்கம். இந்நிலையில், தமிழ கத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீர் வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.