திருநெல்வேலி, ஜூன் 28 - நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் 14 நில அபகரிப்பு வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது. நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, போலீஸ் எஸ்.பி சரவணன் ஆகியோர் உத்தர வின்பேரில் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி .ஜெயபால் பர்னபாஸ், உதவி ஆட்சியர் தமிழரசி, தாசில்தார் பகவதிபெருமாள் மற்றும் துணை தாசில் தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட பதிவா ளர்கள், சார்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான வழக்குகளின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.